தற்போதைய ஜகத்குருக்கள்


ஜகத்குரு மஹா சந்நிதானம்
ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி
71வது பீடாதிபதி
ஜகத்குரு சந்நிதானம்
ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி
72வது பீடாதிபதி


(சந்நியாசம் ஜூன் 10, 1984). ஜ்யேஷ்ட சுத்த துவாதசி அன்று, ரக்தாக்ஷி சம்வத்ஸரா (ஜூன் 19, 1984), ஞாயிறு. அருட்தந்தை ஸ்ரீ வித்யாபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள் உத்தரவின் பேரில், ஸ்ரீ சச்சிதானந்த வாலுகேஸ்வர பாரதி சுவாமிகள் ஸ்ரீ மடத்தின் பாரம்பரியத்தின் கீழ் சந்நியாச தீட்சை இவருக்கு வழங்கினார். பிரம்மச்சாரி ஸ்ரீ ஸ்ரீபாதர் என்று அழைக்கப்பட்டு சந்நியாச தீக்ஷையின் பிறகு ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி சுவாமி என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீ கூடலி-சிருங்கேரி மஹாசம்ஸ்தானத்தின் ஜகத்குரு பீடத்தின் வாரிசாக பொறுப்பேற்றார்.
சங்கராச்சாரியரின் விளக்கவுரைகள் மற்றும் பிரம்ம சூத்திரங்களுடன் சமஸ்கிருதம், தர்கம் மற்றும் உபநிட தங்களின் ஐந்து பெரிய மஹாகாவியங்களையும் அவர் படித்துள்ளார்.
மைசூரில் உள்ள கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 1999ல் நடந்த தேர்வில் வெற்றி பெற்று சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், சுவாமிகள் குவெம்பு விஸ்வ வித்யாலயாவின் சமஸ்கிருதத் துறையில் சங்கராச்சாரியார் பற்றிய ஆய்வறிக்கையை வழங்கி முனைவர் பட்டமும் பெற்றார்.
24-4-2017 அன்று (அக்ஷய திருதியை நாள்) ஸ்ரீ சச்சிதானந்த வாலுகேஸ்வர பாரதி சுவாமிகள் ப்ரம்ம ஐக்கியம் அடைந்ததை அடுத்து, ஸ்ரீ மடத்தின் பக்தர்கள் முன்னிலையில் மாபெரும் யோகப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ சைதன்யாஸ்ரமத்தின் ஸ்ரீ தத்தாவதூதர் மற்றும் ஹரிஹர்புரா, ஸ்ரீ ராமச்சந்திரபுரா, ஸ்ரீ ஸ்வர்ணவல்லி மடங்களின் பிரதிநிதிகள், அகடி ஆனந்தவன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஷோபகிருத சம்வத்ஸரத்தின் ஜ்யேஷ்ட சுத்த திரிதியை (திங்கட்கிழமை 22-05-2023) அன்று, ஸ்ரீ தத்தராஜ் தேஷ்பாண்டே (கணபாடி) அவர்களுக்கு சந்நியாச தீக்ஷை அளித்தார். கூடலி ஸ்ரீ மடத்தின் ஸ்ரீ சாரதாம்பா முன்னிலையில், ஹெப்பள்ளி சைதனாஸ்ரமத்தின் ஸ்ரீ தத்வதூதர், அரசிகெரேவைச் சேர்ந்த சதீஷ் அவதுதர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மடங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மஹாஸ்வாமிகள், தம் வாரிசான ஸ்ரீ ஸ்ரீ அபிநவ சங்கர பாரதிக்கு யோகப்பட்டம் வழங்கியதாக அறிவித்தார்.
ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி மகாசுவாமி






ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி சன்னிதானம் தனது பூர்வாஸ்ரமத்தில் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், வேதாங்கம் மற்றும் தர்மசாஸ்திரம் ஆகியவற்றைப் படித்துள்ளார். வேத சாஸ்திர வித்வானாக, பல மாணவர்களை பல்வேறு பாடங்களில் பண்டிதர்களாக ஆக்கப் பயிற்றுவித்துள்ளார். காசி, ஹரித்வார், குஜராத் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களுக்கு அவர் ஆறு ஆண்டுகளாக பெரும் வித்வான்களின் கீழ் தீவிர கற்றலின் பயிற்சிபெரும் நோக்கத்தைக்கொண்டு பயணம் செய்தார்.
ஸ்வாமிஜி கிரியா யோகாவின் அர்ப்பணிப்பு பயிற்சியாளர் மற்றும் ஆன்மீகத்தின் சிக்கலான விஷயங்களை எளிய சொற்களில் எளிய முறையில் விளக்கி தனது கட்டுரைகள் மூலம் ஏராளமான வாசகர்களை அடைந்துள்ளார். ஸ்ரீ அபிவன சங்கர பாரதி சுவாமிகள் ஸ்ரீ வித்யாபினவ வாலுகேஸ்வர பாரதி குருகுலத்தைத் தொடங்கினார். பல மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடங்கியுள்ளனர்.
ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ அபிநவ சங்கர பாரதி
புராதன நகரமான வாரணாசியில் பாரம்பரிய கற்பித்தல் முறைகள் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானித்து, புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், வாரணாசியில் (காசி) ஸ்ரீ சச்சிதானந்த சங்கர பாரதி வேத பவனைத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல், நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி அதை செழுமைப்படுத்தவும், நமது சடங்குகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன், வாரணாசியில் (காசி) ஸ்ரீ விஸ்வேஸ்வர வேத சாஸ்திர ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். கூடலியில் உள்ள பாரதி கோசாலையின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிலும் ஸ்ரீ ஸ்வாமிஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.





